தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் இது. தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.
Showing posts with label நாட்டுப்பற்று கவிதைகள். Show all posts
Showing posts with label நாட்டுப்பற்று கவிதைகள். Show all posts

Tuesday, 17 June 2014

உலகில் எத்தனை மனித உரிமை கூட்டமைப்பு இருந்தும் என்ன பலன்



பாதுகாப்பு தேவை
எனக்கும்
என்னைச் சார்ந்தோருக்கும்,
என் தாய் நாட்டிக்கும்
என் தாய் மொழிக்கும் தான்.

பாதுகாப்பு வேண்டும்.
என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கும்,
மனித உரிமையாளர்களுக்கும்,
அரசின் கொள்கைகளைச் சான்றிராதோருக்கும்,
சிறு பான்மை இனத்தவர்களுக்கும் தான்.

பாதுகாப்புத் தேடுகிறேன்
என் நாட்டைச் சூரையாடிக் கொன்டிருக்கும்
தலைமையிடம் இருந்தும்,
எங்களால் உயர்த்தப்பட்ட
இரத்தக் காட்டேரிகளிடம் இருந்தும்,
அரசு என்ற பெயரில் கொள்ளையிடும்
குடும்பத்திடம் இருந்தும்
காவல் என்ற போர்வைக்குல் உயிர்களை
சூரையாடும் அதிகாரத்திடமிருந்தும் தான்.

பாதுகாப்பு இல்லை
என் தாய்க்கும் தந்தைக்கும்,
என் உடன்பிறப்புகளுக்கும்,
என் மழலைகளுக்கும்,
என் நாட்டு தேச பக்தர்களுக்கும் தான்.

பாதுகாப்பு உண்டோ
எம் பத்திரிகையாளரின் உயிருக்கு,
எம் போராளிகளின் தேச உண‌ர்விற்கு,
எம் குழந்தைகளின் கற்பிற்கு
எம் மக்களின் பேச்சுரிமைக்கும் தான்.

பாதுகாத்து தாருங்கள்
எம்மைப் பிரிந்த உறவுகளுக்கு,
எம்மிடம் பறித்த சொத்துகளுக்கு.
எம்மிடம் பிடுங்கிய உரிமைகளுக்கு,
எமது தாய் நாட்டுக்கும் தான்

உலகில்
பல மனித உரிமை கூட்டமைப்புகள்
உண்டு.  இருந்தும்
எதற்காக இன்னும்
இலங்கையில்
இத்தனை மனித உரிமை அத்துமீறல்கள்?