Monday, 16 June 2014

இதயம் கவிதை

 


அகத்தின்
அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் ...
காதலின் அழகும் முகத்தில்
நிச்சயம் தெரியும் ....!!!

நல்ல
இதயங்களில் தான்
தூய்மையான காதல்
இருக்கும் - நம் காதல்
இதயத்தால்
பிணைக்க பட்டது ....!!!
********************
உன்னை நான் ஆயிரம்
தடவை கட்டி பிடித்து
முத்தமிட்டு விட்டேன்
கைகளாலோ உதட்டாலோ
அல்ல - என் இதயத்தால் ...!!!
இத்தனை வலியையும்
தாங்கி என் இதயம்
உன்னை இன்றுவரை
காதலிக்க அதுவே
காரணம் உயிரே ....!!!
*********************
என்
இதயத்தை எடுத்து
வைத்து கொண்டு
உன்னை பிடித்திருக்கிறதா
என்று கேட்கிறாயே ...!!!
உன்
இதயம்
உன்னையும் என்னையும்
பார்த்து சிரிப்பதை
பார்க்கவில்லையா நீ ...!!!
*********************
என்னை விட்டு நீ
பிரிந்தத்தை என் இதயம்
பார்க்கவில்லை
அது துடிக்கும் போது
உன் பெயரை சொல்கிறது ...!!!
ஒருமுறை
என் இதயத்துக்குள்
வந்து விடு என் இதயம்
இன்னும் சில நாட்கள்
துடிக்கட்டும் ....!!!
***********************
நீ இதய கதவை
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!
உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!

No comments:

Post a Comment