தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் இது. தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

Monday, 9 June 2014

இனிய பிறந்தநாள் வாழ்த்து




இனிய நண்பா.....
தாய்க்கு அருமை மகனே
தரணிக்கு வெளிச்சமாய் நீ
தமிழ் மீது கொண்ட பற்று
அளவோடு பேசுவாய் அதி
மதியாய் செயலாற்றுவாய்
முயன்றே பல சாதிக்கிறாய்
வாழ்க பல்லாண்டு நலமாய்
ஏற்ற மிகு வளமாய் சுகமாய்
உனது நட்பால் பெருமையும்
மகிழ்வுமாய் வாழ்த்துகிறேன்

Sunday, 1 June 2014

தங்கைக்கு ஒரு கவிதை





நதியில் விளையாடி 
மணலில் வீடுகட்டியதில்லை. 
காக்கா கடி கடித்து 
ஒரு தேன் மிட்டாய்க்கு 
ஒரு யுத்தம் செய்திடவில்லை. 
உன் சடையிழுத்து 
வம்பு நான் செய்திடவுமில்லை 
என் தலையில்கொட்டி 
குறும்பு நீ செய்திடவுமில்லை 
உன் விரல்பிடித்து நான் 
தமிழ் எழுத வைக்கவுமில்லை 
உன் குரல் பிடித்து 
நான் மெய்மறந்ததுமில்லை 
ஒரு தாய் வயிற்றில் 
நீயும் நானும் பிறக்கவுமில்லை 
ஆனாலும் 
நீயும் நானும் 
அண்ணன் - தங்கை. 

எங்கோ பிறந்தோம் 
எங்கோ வளர்கிறோம். 
தமிழை படித்தோம் 
எழுத்தை பிடித்தோம் 
கவிதை எழுதினோம் -அன்பு 
காவியம் படைத்தோம் 

கண்ணில் மணி போல 
மணியில் நிழல் போல 
அண்ணன் தங்கையாய் 
உறவுக்கொண்டோம். 

என் இதயத்தாளில் 
நீ எப்போது எழுதினாய் 
” தங்கை” என்று 

உன் இதயப்புத்தகத்தில் 
நான் எப்போது அச்சிட்டேன் 
“ அண்ணா “ என்று 

மின்னலாய் வந்தாய் -அன்பு 
மழைப்பொழிந்தாய் 
கானல் நீராய் போகிறாய். 


என்னையே என்னை 
சமாதானப்படுத்தி கொள்கிறேன். 
இதோ எம் 
செவியில் ஒரு செய்தி 
”நீங்கள் தொடர்புக்கொள்ளும் 
கவிஞர் தொடர்பு எல்லைக்கு 
அப்பால் இருக்கிறார். “ 

தொடர்ந்து முயற்சிக்கிறேன் 
மீண்டும் நீ என் கவிதை 
தொடர்புக்குள் வருவாய் 
என்ற எதிர்ப்பார்ப்போடு...!