Monday, 16 June 2014

இனியவள்

  


பழகியதில்லை 
பேசியதுமில்லை 
படித்திருக்கிறோம் 
இருவரும் ஒன்றாக 

களவுமில்லை 
காதலுமில்லை 
பகிர்ந்திருக்கிறோம் 
பலவற்றை நன்றாக 

அதில் 
இருமடங்காகிய 
இன்பங்களும் உண்டு 
துடைத்தெரியப்பட்ட 
துன்பங்களும் உண்டு 

விதியென வரும் 
காலச் சுழற்சியில் 
கலந்துவிடாமல் 
கடைசிவரை வருவாயோ 
என் அன்பு தோழி !!!


No comments:

Post a Comment